ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் & ஸ்ரீ சோமேசுவரர் திருக்கோவில்

By தேஜஸ்

அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் & ஸ்ரீ சோமேசுவரர் திருக்கோவில், 

நங்கவள்ளி, சேலம் மாவட்டம்

 

இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது. நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார்.

 

இங்கு சிவன் சிலைகளும் உண்டு , சைவ , வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனி தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

தீராத நோய்கள், தோல் சமந்தமான நோய்கள் , கடன் பிரச்சனை , குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது. இக்கோவில் சோமேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சிவனும், பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE