திருவானைக்காவலில் 8ம் தேதி மகா சிவராத்திரி பெருவிழா

By செய்திப்பிரிவு

பஞ்சபூத தலங்களில் நீர் தலமான, திருவானைக்காவல் அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் மகா சிவராத்திரி வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு மங்கல இசை உடன் தொடங்கும் சிவராத்திரி விழா, மறுநாள் 9ம் தேதி காலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற உள்ளது.

 

இவ்விழாவில், திருமுறை, பக்தி இன்னிசை, சொற்பொழிவு, வரலாற்று நாட்டிய நாடகம், யோகா, மோகினியாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE