சன்னிதானம் செல்லாமல் திரும்பும் ஐயப்ப பக்தர்கள்

By

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளதால் சன்னிதானம் செல்லாமலேயே பக்தர்கள் திரும்புகின்றனர். 

கூட்டத்தை சமாளிப்பது என்பதில் தேவசம்போர்டு, போலீஸ் இடையே கருத்து வேறுபாட்டால் சர்ச்சை எழுந்துள்ளது. 

சபரிமலைக்கு செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை 90,000 பக்தர்கள் வந்துள்ளனர். 

பக்தர்கள் 18 படியேறி ஐயப்பனை தரிசிக்க 18 மணி நேரம் ஆகுவதாக தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது. 

சபரிமலை சீசன் தொடங்கி இதுவரை 3 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE