அபிஷேகம் செய்யும் வரிசை முறைகள் என்ன?

By தேஜஸ்

1.வாசனை தைலம் அல்லது எண்ணெய், 

 

2.திருமஞ்சனத் திரவியப் பொடி அல்லது மஞ்சள் பொடி (அரிசி மாவு), 

 

3.பஞ்சகவ்யம் (பசும்பால்-பசுநெய்-பசுந்தயிர்-மற்றும் கோமயமும் கோஜலமும் கலந்தவை), 

 

4.பஞ்சாமிர்தம் (தேன்-கற்கண்டு-முந்திரி-திராட்சை-பல்வகைப் பழங்கள் மற்றும் நாட்டுச் சர்க்கரை முதலியன), 

 

5.நெய், 6.பால், 7.தயிர், 

 

8.தேன், 

 

9.பழச்சாறு-கரும்புச்சாறு-எலுமிச்சைச்சாறு, 

 

10.இளநீர், 

 

11.அன்னம், சிவாலயங்களாக இருந்தால், 

 

12.திருநீறு-சைவ ஆலயங்களாக இருந்தால், மஞ்சள் காப்பு- வைணவ ஆலயங்களாக இருந்தால், 

 

13.சந்தனம்-பன்னீர் கரைத்தும் உபயோகிக்கலாம், 

 

14.சங்கு நீர். கும்பத்தில் தீர்த்தம் தனியாக மந்த்ரித்து வைக்காமல் போனால் சந்தன அபிஷேகமே நிறைவாகும். 

 

.பூஜை செய்கையில் ஸ்நான அபிஷேமென்றும் மற்றவைகளை அலங்காரமென்றும் அழைக்கிறோம். நைவேத்யானந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி – கிண்ணத்தில் நீர் விடவும். மஹா கணபதயே நம: தாம்பூலம் சமர்ப்பயாமி என்று சொல்லி வெற்றிலை பாக்கைச் சமர்பிக்கவும். கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமி. கற்பூர தீபம் காட்டவும். மந்திர புஷ்பம் சமர்ப்பயாமி (மலர்தூவி வணங்கவும்). ஆத்ம பிரதக்ஷிணம், நமஸ்காரம் செய்து விநாயகர் துதிகள் சொல்லவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE