சபரிமலை கோவில் ஜூலை 16-ம் தேதி திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்படும்

By

சபரிமலை சன்னிதானம் கோவிலில் ஜூலை 16ம் தேதி மாலை திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்படும்  அன்று வேறு பூஜைகள்  கிடையாது.சபரிமலை நடை 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை திறந்திருக்கும்.

 பக்தர்கள் விர்ச்சுவல் க்யூ முறையில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம். இதற்கு ஸ்பாட் புக்கிங் அமைப்பும் தயார் செய்யப்பட்டுள்ளது.

 நிலக்கல் வரும் ஐயப்ப பக்தர்கள் இம்மாதத்திற்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு  (12.07.2022) காலை 10 மணி முதல் துவங்கும்.

 கார்க்கிடகம் மாதாந்திர பூஜை 17.07.2022 காலை 5 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு.

இத ன்பின் வழக்கமான அபிஷேகம், நெய் அபிஷேகம் மற்றும் இதர பூஜைகள் நடைபெறும்.

 நடை திறக்கப்படும் 5 நாட்களும் புஷ்பாபிஷேகம்  படி பூஜை நடைபெறும். 

பூஜைகள் முடிந்து 21ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்...!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE