உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்கள் பளபளவென்று இருக்க

By

ஒவ்வொரு வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் இருக்கும் விளக்கு, மணி என பூஜைக்கு தேவையான பொருட்களை கழிவு மாளாது. எப்படி கழிவினாலும், அந்தப் பொருட்களை பார்க்கும் போது, நமக்கு திருப்தி அளிக்காது. 

ஆகவே,  உங்கள் வீட்டு பூஜைப் பொருட்கள் பளபளவென்று இருக்கு   சில டிப்ஸ் இதே...

முதலில் மூன்று ஸ்பூன் கோதுமை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு இவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் பூஜை பாத்திரங்களில் இருக்கும் எண்ணெய் பிசுக்கை சுத்தமாகத் துடைத்து கொள்ளவேண்டும். 

அதன் பின் கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை பூஜை பாத்திரங்கள் மீது தடவி விட வேண்டும். ஐந்து நிமிடத்திற்குள் இவற்றை அப்படியே விட்டுவிட்டு, பல் துலக்கப் பயன்படும் பிரஷ் ஒன்றை புதியதாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதனை வைத்து இவற்றை நன்றாக தேய்த்துவிட வேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஒரு காட்டன் துணியை வைத்து சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும். பின்பு உங்கள் பூஜை பாத்திரங்களை பார்க்கும் பழுதை கண்ணை கூசுகின்ற அளவிற்கு பளபளப்பாக மாறிவிடும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE