ஆடி முதல் நாளில்...

By செய்திப்பிரிவு

திருப்பதிக்கு 11 ரூபாய்  எடுத்து வச்சிடுங்கோ.

திருப்பதி வெங்கடாசலபதி தம்முடைய திரும ணத்திற்காக  குபேரனிடம் 1,14,00,000 தங்க காசுகளை கடனாக வாங்கினார் அல்லவா?

அதனை குபேரன் பெருமாளிடம் ஆடி மாதம் முதல் நாளில் கேட்பதாக ஐதீகமாம்.

எனவே ஆடி முதல் நாளில் நாம் வீடுகளில் வெள்ளை துணியில் மஞ்சள் தடவி அதனில் 11 ரூபாய் (பதினோரு ஒரு ரூபாய்) எடுத்து வைத்து முடிந்து, அதனை பூஜை அறையில் வைத்து தினமும் பூஜித்து வந்து திருமலை திருப்பதிக்கு செல்லும்போது அதனை உண்டி யில் சேர்ப்பிக்க வேண்டுமாம்.

இப்படி செய்வதால் நம் வீட்டில் செல்வத்திற்கு குறைவு இருக்காது; வறுமை அண்டாது.

கூடவே ஆடி முதல் நாளில் இருந்து ஒரு மண்ட லம் எப்போதும் குலசேகர ஆழ்வார் பாடிய பிரபந்தத்தை பாராயணம் செய்திடல் சிறப்பு.

"ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே

பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே

ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே

மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடா மருந்தவத்த னாவேனே

வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்..
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே

பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே

மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே''.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE