திருச்சிற்றம்பலம்! - சுந்தரர் தேவாரம் : தலம் - கோயில் (சிதம்பரம்)

By நந்தா

நாடுடைய  நாதன்பால்  நன்றுஎன்றும்
     செய்மனமே  நம்மை  நாளும்
தாடுடைய  தருமனார்  தமர்செக்கில்
     இடும்போது  தடுத்துஆட்  கொள்வான்
மோடுடைய  சமணர்க்கும்  முடையுடைய
      சாக்கியர்க்கும்  மூடம்  வைத்த
பீடுடைய  புலியூர்ச்சிற்  றம்பலத்துஎம்
       பெருமானைப்  பெற்றாம்  அன்றே.

பொருள்:
 
மனமே! விரும்புதலை உடைய இறைவனிடத்து, எப்பொழுதும் நன்மையே செய்து ஒழுகுவாயாக! உயிர்களை அதன் போக்கில் விடாது, தடுத்து வருத்தும் எம தூதர்கள் 'செக்கில் இடுதல்' போன்ற துன்பங்களை நாளும் தருகின்றபோது, அப் பெருமானே வந்து தடுத்து ஆட்கொள்வான். 

முடை நாற்றம் வீசும் குளிக்காத உடம்பு உடைய சமணர்களும், முரட்டுத் தனமுடைய பௌத்தர்களும், ஆகிய இவர்களுக்கு, அறியாமையைக் கொடுத்து, வினைகளைக் கழிக்க வைக்கும், பெருமை பொருந்திய பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தில் பெற்றுவிட்டோம்.

 திருச்சிற்றம்பலம்! 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE