ஸ்ரீ ஸ்வர்ணகால பைரவர் திருக்கோவில். அழிவிடைதாங்கி கிராமம், திருவண்ணாமலை மாவட்டம்.

By செய்திப்பிரிவு

காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம்.

 

 ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

 

சன்னதியின் மண்டபத்தின் மேல் பகுதியில்  பைரவரின் எட்டு கோலங்களையும் சுதை வடிவில் தரிசிக்கலாம். அன்ன வாகனத்துடன் கூடிய பிராம்மி சக்தியுடன் அசிதாங்க பைரவர்; ரிஷப வாகன மகேஸ்வரியுடன் ருரு பைரவர்; 

 

மயில் வாகன கவுமாரியுடன் சண்ட பைரவர்; 

கருட வாகன வைஷ்ணவியுடன் குரோதன பைரவர்; குதிரை வாகன வாராஹியுடன் உன்மத்த பைரவர்; யானை வாகன இந்திராணியுடன் கபால பைரவர்; 

சிம்ம வாகன சாமுண்டியுடன் பீஷண பைரவர்; 

நாய் வாகன சண்டிகையுடன் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களை இங்கு காணலாம்.

 

சுமார் 500 வருடங்கள் பழைமையான திருக்கோயில். இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதந்து, சுனவாகனம் கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக அருள் பாலிக்கிறார், 

 

இதை ‘அழிவிடைதாங்கி பைரவபுரம்’ என்றும் சொல்ல்வார்கள்.

 

வெம்பாக்கம் தாலுக்கா, அழிவிடைதாங்கி கிராமம், 

திருவண்ணாமலை

மாவட்டம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE