உச்சி பிள்ளையார் கோயில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்து கோவிலாகும்.இது விநாயகர் என்னும் பிள்ளையாருக்காக கட்டப்பட்டது. இது தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டையின் உச்சியில் அமைந்துள்ளது. புராண கதைகளின்படி திருவரங்கத்தில் அரங்கநாதர் கோயில் கட்டிய பிறகு மன்னர் விபீஷணனிடமிருந்து விநாயகர் ஓடி வந்த இடமாக இந்த மலை உச்சி உள்ளது.
உச்சி பிள்ளையார் கோயில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்து கோவிலாகும், இது விநாயகர் என்னும் பிள்ளையாருக்காக கட்டப்பட்டது. இது தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டையின் உச்சியில் அமைந்துள்ளது. புராண கதைகளின்படி திருவரங்கத்தில் அரங்கநாதர் கோயில் கட்டிய பிறகு மன்னர் விபீஷணனிடமிருந்து விநாயகர் ஓடி வந்த இடமாக இந்த மலை உச்சி உள்ளது.
திருச்சி மலைக்கோட்டை மீது அமைந்த விநாயகர் கோயில்.
மலைக்கோட்டை கோயிலானது பாறையின் மேல் 83 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பாறை உலகின் மிக பழமையான பாறைகளில் ஒன்றாக இருக்கிறது. மென்மையான இந்த பாறையானது முதன்முதலில் பல்லவர்களால் வெட்டப்பட்டது. பிறகு இக்கோயில் மதுரை நாயக்கர்களால் விஜயநகர ஆட்சியின் கீழ் முழுவதுமாக நிறைவு செய்யப்பட்டது.
இந்த கோயிலானது மலை பாறையின் உச்சியில் அமைந்துள்ளது. அதனால் தான் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் என்ற பெயர் பெற்றது.
இந்த கோயில் இயல்பாகவே பிரமிப்பை ஏற்படுத்தும் பாறை கட்டிடக்கலையைக் காட்சிப்படுத்துகிறது. இந்த பிள்ளையார் கோயில் பாறையின் செங்குத்தான படிகளை சிறிய பாதையாக கொண்டுள்ளது. இந்த மலை திருச்சி நகர்ப்புறத்தையும் திருவரங்கத்தையும் காவேரி ஆற்றையும் கொள்ளிடத்தையும் மிக அழகாக காட்சிப்படுத்துகிறது.
பல்லவர்களால் கட்டப்பட்ட பழமையான மற்றும் ஈர்க்கும்படியான கட்டிடக்கலையைக் கொண்டிருப்பதால் இந்த கோயிலை இந்திய தொல்பொருள் துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
விபீஷணன் ஈழ தேசமான இலங்கையை ஆட்சி செய்த பல துறைகளில் சிறந்து விளங்கிய அசுர மன்னர் இராவணனின் தம்பி.
ஸ்ரீரங்க நாதரை திருச்சியில் தங்க வைத்த பிள்ளையார்
இராமாயண காவியத்தின்படி பகவான் ராமரின் மனைவி சீதையை இராவணன் கடத்திச் சென்றதால் இராமர் சுக்ரீவனின் உதவியுடன் அனுமனைக் கொண்டு இராவணனைத் தோற்கடித்தார். இராவணனின் தம்பியாக அவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட தம்பியாக விபீஷணன் இருந்தாலும் நீதியின் பக்கம் இருக்கவேண்டும் என்பதற்காக போரில் இராமனுக்கு உதவி செய்தார். இதனால் போரில் இராமனால் வெற்றி பெற முடிந்தது. இந்த அன்பின் காரணமாக இராமர் திருமாலின் உருவமான அரங்கநாதர் சிலையை வழிபாட்டிற்காக விபீஷணனுக்கு வழங்குகிறார்.
விபீஷணனும் பிள்ளையாரும்.
விபீஷணன் ராமரை ஆதரித்தாலும் அவர் ஒரு அசுரக் குலத்தைச் சார்ந்தவர். எனவே தேவர்கள்(இந்துப் புராணப்படி அசுரர்கள் தேவர்களின் எதிரி) இறைவனின் திருவடிவை ஒரு அசுரர் தங்களது அரசிற்கு எடுத்துச் செல்வதை விரும்பவில்லை. அவ்வாறு எடுத்துச் செல்வதைத் தடுத்து நிறுத்த எண்ணினர். அதற்குத் தடைகளை நீக்கும் அறிவைப் போதிக்கும் இறைவனான பிள்ளையாரை நாடினர்.
அவர் ஒரு திட்டத்தை வகுத்தார். அந்த சிலையை எடுத்துச் செல்வதில் ஒரு நிபந்தனை இருந்தது. அதாவது சிலையை வழியில் எங்காவது இறக்கி வைத்தால் பிறகு நகர்த்த முடியாது. அந்த நிபந்தனையின் அடிப்படையில் விபீஷணன் சிலையைக் கொண்டு சென்றார். ஆனால் வழியில் காவிரி ஆற்றைக் கண்டதும் அவர் குளித்துவிட்டு சடங்குகளைச் செய்ய விரும்பினார். ஆனால் நிலத்தில் சிலையை வைத்தால் நகர்த்த முடியாதே என்று குழம்பினார்.
அவ்வாறு வைக்கப்பட்ட சிலை அங்கேயே நிலையாக இருக்க நேரும்.
விபீஷணன் கதை
அதற்குத் தீர்வாக விபீஷணன் குளிக்கும் போது சிலையைத் தாங்கி நிற்க யாரேனும் ஒருவரைத் தேடினார். அப்போது விநாயகர் ஒரு அப்பாவி சிறுவனாக அவரிடம் தோன்றி நான் அந்த சிலையைத் தாங்கிப் பிடிக்கிறேன் என்று நம்பிக்கை ஊட்டினார். அதை நம்பி விபீஷணன் குளிப்பதற்கு ஆற்றில் மூழ்கினார். அப்போது அந்த சிறுவன் சிலையைத் தரையில் வைத்திருந்தார். கோபம் கொண்ட விபீஷணன் அந்த சிறுவனைத் தண்டிக்க விரட்டினார். அப்போது அந்த சிறுவன் காவேரி ஆற்றின் அருகிலுள்ள பாறையின் மேல் ஓடினார். அங்கு வந்து சிறுவனை அடைந்து தாக்கினார். அதில் சிறுவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் புராணம்
விக்கிரத்தின் நெற்றியில் இன்றும் அந்த தழும்பைப் பரக்கலாம். அந்த சிறுவன் தன்னை விநாயகர் என்றும் எதற்காக இவ்வாறு செய்தேன் என்பதை விளக்கியதும் விபீஷணன் மன்னிப்பு கோரினார். அந்த சிலையானது திருவரங்கத்தில் குடிக்கொள்ள படைக்கப்பட்டது என்ற உண்மையை அறிந்த பின்னர் விபீஷணன் இலங்கைக்குச் சென்றார்.