ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில், திருச்சி

By நந்தா

அருள்மிகு ஸ்ரீ   வேதநாயகி தாயார் உடனுறை ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில்.

 

தல விருட்ஷம் : வில்வம்.

 

தல தீர்த்தம் : காவிரி.

 

புராணப் பெயர் : வேதபுரி.

 

ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலைகளுடன் நாகத்தை தரிசிக்கலாம்.

 

பாஞ்சராத்ர ஆகம முறைப்படி பூஜைகள் நடக்கும். கோயில் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்குள் ஏதேனும் பிரச்சனை உண்டானால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். இப்பகுதியில் யாராவது பொய் சொன்னாலோ, பிறரை நயவஞ்சகமாக ஏமாற்றினாலோ, கம்பத்தடியார் முன் சத்தியம் செய்து தரும்படி கேட்கும் வழக்கமும் இருக்கிறது. 

 

 இத்தல பெருமாள் நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளிக் கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் ஸ்ரீபூதேவியும் இருக்கிறார்கள். கீழே பிரகலாதன் இருக்கிறார்.

 

திருநாராயணபுரம். திருச்சி.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE