திருப்புறவார் பனங்காட்டூர் தலவரலாறு (பனையபுரம்)

By தேஜஸ்

இறைவர் திருப்பெயர்:   பனங்காட்டீசர்.  இறைவியார் திருப்பெயர்: புறவம்மை, சத்யாம்பிகை.  தல மரம்:  பனை மரம் (Palm Tree)  தீர்த்தம் : பத்ம தீர்த்தம். சடா கங்கை  வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், சூரியன், சிபிச்சக்கரவர்த்தி. இது, பனை மரத்தைத் தலமரமாகக் கொண்டதாலும், சிபிச் சக்கரவர்த்தி (புறாவின் பொருட்டு தன் தசையை அரிந்தவர்) வழிபட்டதாலும்(புறவார்), இப் பெயர் பெற்றது.சூரியன், பூசித்துப் பேறுபெற்றத் தலம். சிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவ அபராதத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். 

அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூர் என்ற இத்தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியக் கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.  

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :   சம்பந்தர்    -    1. விண்ணமர்ந்தன மும்மதில் (2.53); 
பாடல்கள்  :  சேக்கிழார்   - 
அரசிலியை (12.28.53) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.Specialities அறுபத்து மூவர் சிலா ரூபங்கள், வரிசையாகவுள்ளன. இவற்றுள் திருநீலகண்டர் தம் மனைவியுடன் கூடி இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு மிகவும் அரிதான காட்சியாகும்
சித்திரை மாதம்,முதல் ஏழு நாட்களில், சூரியனுடைய கிரணங்கள் சுவாமியின் மீதும், அம்பிகையின் மீதும் பதிகின்றது.

சோழர் காலக் கல்வெட்டுகள் மூன்று படி எடுக்கப்பட்டுள்ளன.
இறைவன் பெயர் திருப்பனங்காடுடைய மகாதேவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. கோனேரின்மைகொண்டான் காலத்தில் இக்கோயில், திருப்புறவார் பனங்காடுடையார் கோயில் என வழங்கப்பட்டது. குலோத்துங்க சோழன் 1 தனது எட்டாம் ஆண்டில் ஒரு விளக்கிற்காகப் பணம் கொடுத்துள்ளான்.

கோனேரின்மைகொண்டான் நலத்தின் பொருட்டுக் கோதண்டராமன் சந்தி என்ற விழா நடத்துவதற்காக நிலதானம் செய்யப்பட்டது.பரகேசரி ஆதி ராஜேந்திர தேவன் மூன்றாம் ஆண்டில் நில தானம் செய்யப்பட்டது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE