அருப்புக்கோட்டை படித்துறை விநாயகர் கோவில்

By சரவணன்

ஜடாமுடியுடன், தவக்கோலத்தில் தோற்றமளி க்கும் அபூர்வ விநாயகர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில்  படித்துறை விநாயகர் கோயில் அமைந்துள்ள து. இக்கோவில் விநாயகர் ஜடாமுடியோடு வித்தியாசமாக காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். 

பாண்டிய மன்னன் ஒருவனுக்கு,  சாபத்தினா ல் உடலில் தீராத நோய் ஒன்று ஏற்பட்டது. அந்த சாப நிவர்த்திக்காகவும், தனது நோய் நீங்கிடவும் , அந்த பாண்டிய மன்னன் அருப்பு க்கோட்டை சொக்கநாதர் கோவில் அருகிலே யே ஒரு  திருக்குளத்தினை வெட்டினான்.  

அந்த திருக்குளம் வெட்டிய இடத்தில்,  புதையு ண்டுக் கிடந்த அழகிய விநாயகர் சிலை ஒன்றுக் கிடைத்தது. எல்லா விநாயகர் சிலை போன்று அல்லாமல் , அந்த விநாயகர் சிலை தலையில் கிரீடம் இல்லாமல், ஜடாமுடியுடன்  தவக்கோலத்தில் காணப்பட்டதாம்.

எனவே இந்த விநாயகர் சிலை காலத்தால் , பாண்டிய ஆட்சிக்கும் முற்பட்டது எனவும் , தவக்கோலத்தில் இருப்பதால், சித்தர்களாலு ம், முனிவர்களாலும் இவர் பூஜிக்கப் பட்டு இருக்கலாம் எனவும் கருதுகிறார்கள். 

பாண்டிய மன்னன் இந்த சிலையை , திருக்கு ளத்தின் ஈசான்ய மூலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்,.காலங்கள் பல மாறிய பின்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலை முன்பு இருந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு, அதே ஈசான்ய மூலையில் புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பிரார்த்தனை

மாங்கல்ய பாக்யம் வேண்டுவோர் வழிபட சிறந்த கோயிலாகும். விநாயகர் சதுர்த்தி, மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE