உன்னிடம் தட்ஷணை குடுக்க பணம் இல்லை என்று கலங்குகிறாயா?

By தேஜஸ்

உன் விழிகள் நம்பிக்கையோடு கொடுத்த இந்த கண்ணீருக்கு இணையான தட்ஷனை ஒன்று இருக்கா.இதில் எனக்கு நிர்மலமான உன் இதயம் தெளிவாக தெறிகிறது.இந்த விழிநீர் உன் இதயத்தின் கூக்குரல்,என்னிடம் உன்னை பரிபூர்ணமாக ஒப்படைத்த சமர்பணம் இது.என்மேல் நீ வைத்திருக்கின்ற அன்போட அடையாலம் இது.உன் பக்தியின் வெளிப்பாடு இது.

உன்னிடம் பணம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. பக்தி வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.பக்திக்கு நம்பிக்கைதான் தேவை. நம்பிக்கையோடு என் முன் அமர்ந்து
ஒரு இலையை போடுங்கள்,இல்லை ஒரு புஷ்பத்தை போடுங்கள், இல்லை என்றால் ஒரு துளி தண்ணீர் போதும். உங்க பக்தியில்  நானும் உங்களுடன் ஐக்கியமாகிவிடுவேன்.

உங்க பிரசாதம் எதுவாக இருந்தாலும் அதை நான்ஏற்றுக் கொள்வேன்.பக்தியோடு வைக்கப்படுகிற பிரசாதங்களைவிட பக்தனோட பக்தியே மேன்மையானது. சாய்யின் குரல்.

தவறை உணர்ந்த மனிதன் இங்கே தன்னை உணர்ந்து தாள்பணிந்தான்.
தட்ஷணைக்கு ஏதுமின்றி கண்ணீரை அர்ப்பணித்தான்.

கண்ணீர் துளி கருணை அன்னை சாய்மனதை உருக்கியது. சத்தியத்தின் விளக்கமதை உலகிற்கு உணர்த்தியது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE