ஆஞ்சநேயரிடம் இருக்கும் 10 விதமான சக்திகள்?

By சரவணன்

கலியுகத்தில் கண் கண்ட கடவுளாக இருந்து, பக்தர்களை காப்பதற்காக பூமியில் வசித்து வருவதாக சொல்லப்படும் தெய்வம் அனுமான். ராம பக்தியை, ராம நாமத்தின் பெருமையை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்பதற்காக நித்யசிரஞ்ஜீவியாக இருந்து பக்தர்களை காக்கக் கூடியவர். ஒரு தெய்வத்தை வணங்கினால் பல தெய்வங்களின் அருளை வழங்கும் ஆற்றல் அனுமானுக்கு மட்டுமே உண்டு. அதனாலேயே அனுமனை வழிபடும் பக்தர்கள் அதிகம். அவரிடம் இருக்கும் முக்கியமான 10 சக்திகள் பற்றி பக்தர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனுமன், ஆஞ்சநேயர், மாருதி, வாயு புத்திரன் என பலவிதமான பெயர்களால் அழைக்கப்பட்ட ராம பக்தன் அனுமன், சிவ பெருமானின் ருத்ர அவதாரமாக கருதப்படுபவர். ராமாயணத்தில் மட்டுமின்றி மகாபாரதத்திலும் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக அனுமான் கருதப்படுகிறார். இவரை பற்றி புராணங்களில் பலவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன.
ஆஞ்சநேயரிடம் இருக்கும் 10 விதமான சக்திகள் இது தான்.

கலியுகத்தில் கண் கண்ட கடவுளாக இருந்து, பக்தர்களை காப்பதற்காக பூமியில் வசித்து வருவதாக சொல்லப்படும் தெய்வம் அனுமான். ராம பக்தியை, ராம நாமத்தின் பெருமையை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்பதற்காக நித்யசிரஞ்ஜீவியாக இருந்து பக்தர்களை காக்கக் கூடியவர். ஒரு தெய்வத்தை வணங்கினால் பல தெய்வங்களின் அருளை வழங்கும் ஆற்றல் அனுமானுக்கு மட்டுமே உண்டு. அதனாலேயே அனுமனை வழிபடும் பக்தர்கள் அதிகம். அவரிடம் இருக்கும் முக்கியமான 10 சக்திகள் பற்றி பக்தர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனுமன், ஆஞ்சநேயர், மாருதி, வாயு புத்திரன் என பலவிதமான பெயர்களால் அழைக்கப்பட்ட ராம பக்தன் அனுமன், சிவ பெருமானின் ருத்ர அவதாரமாக கருதப்படுபவர். ராமாயணத்தில் மட்டுமின்றி மகாபாரதத்திலும் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக அனுமான் கருதப்படுகிறார். இவரை பற்றி புராணங்களில் பலவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன.
அனுமனின் பெருமைகளை கூறும் மந்திரத்தை அனுமன் சாலிசா என்றும், அனுமனின் வீரம், அழகு, சாகசங்களை, பலம் ஆகியவற்றை கூறுவாத சுந்தர காண்டம் என்றும் சொல்கிறோம். இந்த இரண்டு நூல்களை படித்தாலும் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த இரண்டையும் படிப்பதால் அனுமானின் பரிபூரணமான அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ராம பக்தன், தைரியம், வீரம், நட்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எடுத்துக் காட்டாக அனுமனை தான் நான் சொல்லுவதுண்டு. இது தவிர ஆஞ்சநேயருக்கு மிக முக்கியமான 10 சக்திகள் உள்ளன. இந்த 7 சக்திகளால் தான் அனமனை பலத்திற்குரிய தெய்வமாகவும், சிரஞ்னீவி என்றும் அழைக்கிறோம்.

ஆஞ்சநேயரின் 10 சக்திகள் :
1. எந்த ஒரு ஆயுதத்தாலும் தாக்கவோ, மரணத்தை விளைவிக்கவோ முடியாதவர் என விஸ்வகர்மாவால் ஆசீர்வாதிக்கப்பட்டவர் ஹனுமான்.
2. என்றும் மரணம் நெருங்காமல், அழிவில்லாமல் இருக்கக் கூடியவர் என எம தர்ம ராஜாவிடம் இருந்து வாழ்த்து பெற்றவர்.
3. இந்த உலகத்தில் எந்த ஆயுதத்தால் கொல்ல முடியாதவர் என பிரம்ம தேவரிடம் வரம் பெற்றவர்.
4. புயலுக்கு அல்லது வாயு தேவனுக்கு இணையான வேகம் பெற்றவர். அதனாலேயே இவரை மாருததுல்யவேகம் என குறிப்பிடுவதுண்டு.
5. புத்தி கூர்மையில் தலை சிறந்தவர். அதனால் தான் அனுமனை குறிப்பிடும் போது புத்திமதாம்வரிஷ்தம் என குறிப்பிடுகிறார்கள்.
6. அனைத்து புலன்களையும் வென்றவர் அல்லது புலன்கள் அனைத்தையும் தன் வசம் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர் என்று பொருள்.
7. இரும்பு போன்ற உடலையும், பலம் வாய்ந்த ஆயுதமான கதாயுதத்தை தாங்கி இருப்பவர் என்பதாலேயே இவரை பஜ்ரங்கபலி என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள்.
8. நினைத்த நேரத்தில் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொள்ளவும், மறைக்கவும் கூடிய ஆற்றல் மிக்கவர்.
9. பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் துர்க்கையை வழிபட்ட பலனையும், இவர்கள் நான்கு பேரின் குணங்களையும் கொண்டவர் அனுமான்.
10. நரசிம்மன், ஹயக்ரீவர், கருடன், வராகர் ஆகியோரின் பலம், தைரியம், அற்புத சக்திகள்,, எதிரிகளை வெல்லுதல் ஆகியவற்றை பெற்றவர் அனுமன்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE