அருள்மிகு காமாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம்

By தேஜஸ்

புராண பெயர்: கச்சி
மாநிலம்: தமிழ்நாடு
மாவட்டம்: காஞ்சிபுரம் மாவட்டம்
அமைவிடம்:
காஞ்சிபுரம்
ஏற்றம்: 136 m (446 அடி)
மூலவர்:
காமாட்சியம்மன்
குளம்: பஞ்ச கங்கை தீர்த்தம்

சிறப்புத் திருவிழாக்கள்: மாசி உற்சவம், வைகாசி வசந்த உற்சவம், ஆடித் திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பூசம் மற்றும் சங்கர ஜெயந்தி
அம்மனை பிரதிட்டை செய்தவர்: வேதவியாசர்
ஸ்ரீசக்கரம் பிரதிட்டை செய்தவர்: ஆதிசங்கரர்

கோயில் வரலாறு:
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம் காமாட்சி அம்மன் கோயில் ஆகும், விஸ்வப்ராஹ்மணர் -களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் பொற்கொல்லர்களின் பாரம்பரியத்தை காக்கின்ற குலதெய்வமாக இருக்கிறது விஸ்வகர்மா மக்களால் இந்த கோவில் கட்டப்பட்டது

இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை. காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், 'உக்ர ஸ்வரூபினி' என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால், பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE