ஸ்ரீ ஆதிவராஹ பெருமாள் திருக்கோவில், அம்பாசமுத்திரம்

By நந்தா

அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீதேவி், பூதேவி சமேத ஸ்ரீ ஆதிவராஹ பெருமாள் திருக்கோவில், அம்பாசமுத்திரம்.

குபேரன் ஆதிவராகரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. குபேரன் வராகமூர்த்தியை பிரதிஷ்டை செய்தபோது யாக பாத்திரங்கள் கல்லாய் மாறின. அதனால் இவ்வூர் 'சிலாசாலிகுரிசி' எனப்பட்டது. இதுவே பின்னர் மருவி 'கல்லிடைக்குறிச்சி'யாயிற்று.

கருவறையில் மூலவர் ஆதிவராகர், பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் இடது மடியில் பூமா தேவியை தாங்கிய நிலையில் தரிசனமளிக்கிறார். பெருமாளின் இத்தகைய அமர்ந்த கோலம், இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

இவரது மடியில் அமர்ந்து இருக்கும் பூமா தேவி, பெருமாளின் திருமுகத்தை பார்த்தபடி இருக்கிறார். இத்தல பெருமாளுக்கு தாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது. உற்சவர் லட்சுமிபதி எனும் திருநாமத்துடன் தாயார் பூமாதேவியுடன் காட்சி தருகிறார்.

இத்தலம் கல்யாணபுரி என்றும் அழைக்கப்படுகிறது..
இத்தலத்தில் பெருமாளின் கருட சேவையை அடிக்கடி நாம் தரிசிக்க முடியும்.

அம்பாசமுத்திரம். நெல்லை மாவட்டம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE