பவள மாலை அணிந்தால் உடலில் என்ன மாற்றம்?

By செய்திப்பிரிவு

முதுகெலும்பற்ற உயிரின வகைகளைச் சார்ந்தவை ஆகும். இவற்றின் மேல் சுண்ணாம்பு அல்லது கடினமான ஓடு இருக்கும். இவைகள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. கடலில் விளையும் ஒரு ரத்தினங்களில் பவளப் பூச்சிகள் எனப்படும் சிறிய உயிரினங்களால் உருவாக்கப்படுகின்றன.

 கடினமான பாறைகள் மேல் இருந்த பூச்சிகள் நின்று கொண்டு இறை தேடும் போது பவளப்பாறைகளை உருவாக்குகின்றன. இதுவே பவளம் உண்மையாக உற்பத்தியாகும்.

முறையாகும் பவளம் கால்சியம்  கார்பன்டையினால் ஆளானது. பவளங்கள் கருப்பு, வெள்ளை, நீலம், ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.  பவளத் திருக்கு ஆங்கிலத்தில் கோரல் என்று பெயர் பவளத்தின் அமைப்பை கொண்டு ஆறு அல்லது எட்டு கிரகங்கள் உடையது என இரு வகைகளாக பிரிக்கப்படுகிறது.இதைத் தவிர மருத்துவ ரீதியாகவும் பவளத்தை அணிந்தால் ரத்த சிகப்பணுக்கள் கூடுகின்றது. உடலில் சுறுசுறுப்பும் உண்டாகிறது.

செவ்வாய் தோஷம் உடையவர்களும், மனத்தளர்ச்சி உடையவர்களும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறவும், நிலையத்தை அடைய விரும்புபவர்கள் பவளக்கல்லை அணியலாம். கண்களில் பாதிப்பு உடையவர்கள், குடல்புண் இருதய பாதிப்பு, உஷ்ண சம்பந்தப்பட்ட நோய், தோல்நோய், பெண்களுக்கு உண்டாகக் கூடிய மாதவிடாய் கோளாறு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் பவளக் கல்லை அணிவதால் எல்லா பிரச்சனைகளிளும் இருந்து விடுபடலாம்.

பவளம் தடைகளையும் விபத்துகளையும் தவிர்க்கும். சண்டையையும் வெறுப்பையும் குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
பவளத்தால் செய்யப்படும் பவழ பஸ்பம் என்ற மருந்து இதய நோய்களுக்கு சிறந்தது.

இதுபோன்ற காரணத்தினாலேயே தான் அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் பெண்களுக்கு தாலி சங்கிலியில் பவளக் கற்களை சேற்றினார்கள்.

பவள மாலைகளை கழுத்தில்தான் அணிய வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை இதை நீங்கள் பூஜை அறையிலும் வைத்து பூஜிக்கலாம், வீட்டு வாசலிலும் மாட்டி வைக்கலாம், வீட்டின் முன் புறமாகவும் வைக்கலாம், இதனால் நேர்மறை ஆற்றல் (பாசிட்டிவ் எனர்ஜி) பல மடங்கு அதிகரிக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE