சித்ரகுப்தர் காயத்ரி மந்திரம்!

By நந்தா

சித்திரகுப்தர் காயத்ரி மந்திரம் பாவங்களை போக்கி, ஆயுளை நீடித்து, புத்தியை தெளிவாக்க உதவும் சக்தி வாய்ந்தது.

இந்த மந்திரத்தை சித்ரா பௌர்ணமி அன்று காலை மாலை மற்றும் சனிக்கிழமைகளில், கையில் எழுத்தாணி ஏந்திய சித்ரகுப்தரை தியானித்து உச்சரிப்பது சிறப்பாகும்.

ஸ்ரீ_சித்ரகுப்த_காயத்ரி மந்திரம்:
ஓம் லேகிநி ஹஸ்தாய வித்மஹே
பத்ரத ராய தீமஹி
தந்நோ சித்ரஹ் ப்ரசோதயாத்

மந்திரத்தின் பொருள்:
லேகிநி ஹஸ்தாய: கையில் எழுத்தாணி (எழுதுகோல்) வைத்திருப்பவரை,
பத்ரதராய: நல்லவற்றை (தர்மங்களை) காப்பவரை,வித்மஹே: உணர்கிறோம்.

அறிகிறோம், தீமஹி: தியானிக்கிறோம்,

தந்நோ சித்ரஹ் ப்ரசோதயாத்: அந்த சித்ரகுப்தர் நமது புத்தியை தெளிவாக்கி நல்வழிப்படுத்துவாராக.

வழிபாட்டு முறை:
சித்ரகுப்தருக்கு சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.அவரை வணங்குவதன் மூலம் பாவங்களில் இருந்து விமோசனம் பெறலாம் மற்றும் ஆயுள் நீடிக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE