திருநாகேஸ்வரம் தல வரலாறு

By சரவணன்

நவக்கிரகத் தலங்களில் மங்கல ராகுவாக அருள்பாலிக்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோவிலின் பின்னணி இதோ!

ஒரே அசுரன்... இரண்டு கோள்கள்!:
புராண காலத்தில் சுவர்பானு என்ற அசுரன், தேவர் வடிவம் எடுத்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் அமர்ந்து அமிர்தத்தை உண்டான். இதை மகாவிஷ்ணுவிடம் சூரிய-சந்திரர்கள் காட்டிக்கொடுக்க, விஷ்ணு தனது சக்கரத்தால் அசுரனின் தலையைத் துண்டித்தார். அமிர்தம் உண்டதால் உயிர் பிரியாமல், தலைப்பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாவும் மாறியது.

ராகு பகவான் சாபம் நீங்கிய கதை:
தன்னை மகாவிஷ்ணுவிடம் காட்டிக்கொடுத்த சூரிய, சந்திரர்களைப் பழிவாங்க ராகுவும் கேதுவும் அவர்களை விழுங்கத் தொடங்கினர், இதுவே கிரகணம். இதனால் ஏற்பட்ட பாவங்களிலிருந்தும், முனிவர் ஒருவரின் சாபத்திலிருந்தும் விடுபட ராகு பகவான் பூலோகம் வந்து பல சிவத்தலங்களை வழிபட்டார்.

இறுதியாக, மந்தார மரங்கள் நிறைந்த இந்த வனத்தில் சுயம்புவாக இருந்த நாகநாதசுவாமியை நோக்கி கடும் தவம் புரிந்தார். சிவபெருமான் ராகுவின் தவத்திற்கு மெச்சி, மகா சிவராத்திரி நாளில் அவருக்குக் காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.

ஏன் இங்கு பால் நீலமாக மாறுகிறது?:
ராகு பகவான் சிவபெருமானை வழிபட்ட போது, தனது உடலில் இருந்த விஷத்தை வெளியேற்றித் தூய்மையானார். இன்றும் ராகு காலத்தில் அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும் போது, அந்த நஞ்சு நீங்குவதைக் குறிக்கும் விதமாகவே வெள்ளை நிறப் பால் நீல நிறமாக மாறுகிறது என்பது ஐதீகம்.

மங்கல ராகுவின் தனிச்சிறப்பு:
மற்ற தலங்களில் நாக வடிவில் இருக்கும் ராகு, இங்கு சிவபெருமானின் அருளால் மனித வடிவில் தனது இரு தேவியர்களான நாகவல்லி மற்றும் நாகக்கன்னி ஆகியோருடன் மங்கலக் கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலின் முக்கியத் தெய்வங்கள்:
மூலவர்: நாகநாதசுவாமி (சிவன்)
தாயார்: கிரிஜாம்பிகை / பிறையணி வாணுதல் அம்பிகை
ராகு: மங்கல ராகு பகவான்
ராகு தோஷம் நீங்கி யோகங்கள்
பெருக, வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய தலம் இது!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE