வசீகரம் தரும் கிளி முக தேவி!

By தேஜஸ்

ஆன்மீகத்தில் விசித்திரங்கள் தொடர்கின்றன! கிளி முகமும், பெண் உடலும் கொண்ட "சுக முகி" யோகினியைப் பற்றித் தெரியுமா?

யார் இந்த சுக முகி?

64 யோகினிகளில் ஒருவரான இவள், அழகின் அடையாளம். நம் வாக்கிற்கு இனிமையையும், எடுத்த காரியங்களில் வசீகரத்தையும் தரும் மகாசக்தி.எதைப் பேசினாலும் அது உண்மையாக இருக்கும். சுக முகி தேவி, ஒருவருடைய வாக்கிற்குச் (பேச்சுக்கு) பேராற்றலை வழங்கக்கூடியவள். இவள் அன்னை ராஜமாதங்கியின் (சரஸ்வதி வடிவம்) பெண் சக்தியாகவும், காமதேவனின் தூதுவராகவும் போற்றப்படுகிறாள்.

கிளியின் கூர்மையான புத்தியும், அன்னையின் கருணையும் இணைந்த வடிவம். நம்மிடம் இருக்கும் கலைத்திறனை உலகிற்கு வெளிப்படுத்தி, புகழைப் பெற்றுத் தருபவள். இவள் ஒரு கையில் கரும்பும், மறு கையில் மலர்ப் பாணமும் ஏந்தி, பச்சைப் பட்டுடையில் மிகவும் வசீகரமாகக் காட்சியளிப்பாள். இவள் நம் மனதில் தோன்றும் நல்லெண்ணங்களைப் பிறருக்கு இனிமையாக எடுத்துச் சொல்லும் கலைக்கு அதிபதி.

இவளை "வாக்கின் வசீகரம்" என்று அழைப்பார்கள். யோகக் கலையில் "விசுத்திச் சக்கரம்" தூண்டப்படுபவர்களுக்கு இந்த தேவி அஷ்டமா சித்திகளில் ஒன்றான நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றலை வழங்குவாள் என நம்பப்படுகிறது.

பேச்சாற்றல் வளரவும், கலைத்துறையில் வெற்றி பெறவும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெருகவும் இவரை வழிபடலாம். முக்கியமாக, திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய இவள் அருள் புரிவாள்.

ஒரிசாவின் "ஹிராப்பூர்" மற்றும் மத்தியப் பிரதேசத்தின் 64 யோகினி கோவில்களில் இந்த அபூர்வத் தேவியின் திருவுருவத்தைக் காணலாம்.

அழகும் அறிவும் ஒருங்கே கொண்ட இந்த சுக முகி வடிவம் மகா விசித்திரம்!

சுக முகி மூல மந்திரம்:
"ஓம் ஹ்ரீம் சுக முகாயை நம: !!"

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE