திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமாகாளம் மகாகாளநாதர் திருக்கோயில், ஆன்மீக அதிசயங்களின் சங்கமம்! பொதுவாக நாம் விநாயகரை யானை முகத்துடன் தான் தரிசித்திருப்போம். ஆனால், இத்தலத்தின் மிகமுக்கிய அதிசயம் "ஆதி மனிதமுக விநாயகர்".
இந்த கோயிலின் டாப் 5 அதிசயங்கள்:
மனித முக விநாயகர்: சோமாசிமாற நாயனார் நடத்திய யாகத்திற்காக, விநாயகர் தும்பிக்கை இல்லாமல் மனித முகத்துடன் காட்சி தந்து அருளிய தலம் இது. இன்றும் அதே அபூர்வ கோலத்தில் நாம் அவரை தரிசிக்கலாம்.
ஆதி ஸ்கந்தர்: விநாயகரைப் போலவே, முருகப்பெருமானும் இங்கு மிகத் தொன்மையான "ஆதி ஸ்கந்தர்" வடிவில் எழுந்தருளியுள்ளார்.
காளி வழிபட்ட ஈசன்: அம்பன், அம்பாசூரன் என்ற அசுரர்களை வதம் செய்த பின் காளி தேவி தன் தோஷம் நீங்க வழிபட்ட தலம். அதனால் தான் இவருக்கு "மகாகாளநாதர்" என்று பெயர்.
மோட்ச லிங்கம்: மரண பயம் உள்ளவர்களும், தீவிர உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்களும் இங்குள்ள மோட்ச லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.
அச்சம் தவிர்த்த நாயகி: பயக்ஷர்ம்பிகை அம்மன்! பயத்தைப் போக்கி பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் அன்னை. திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு அம்மனுக்கு மாலை சாத்தி வழிபட்டால் விரைவில் நல்ல செய்தி தேடி வரும்.