கோமாதா பூஜை செய்வது எப்படி?

By செய்திப்பிரிவு

எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் ஆராதனையால் அடையலாம் என்கிறன வேத புராணங்கள். கோடி கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைத்து விடும்.

மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அஷட் வசுக்களும், நவகிரங்களும், தச நாகங்களும், அஷ்டதிக்கு பாலர்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் மேலானவளும், ஈரேழு பதினான்கு உலகங்களையும் உயிர்களையும் படைத்து காத்து ரட்சிப்பவளானா தேவி மனோன்மணியான பராசக்தியின் அம்சமே கோமாதா என்கிறது கோமாதா மகாத்மியம்.

 

கோமாதா பூஜையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். 

 

கோ பூஜையை செய்வதால் பணக்கஷ்டம் தீரும். மணப்பேரும் மழலை, வரமும் கிடைக்கும். பசுவை பூஜிக்கும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது. முன்னோர் ஆசி சேரும். முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். மனக்குறையும் உடல் பிணிகளும் விலகும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.சுருக்கமாக சொன்னால் கோமாதாவை வணங்குவதால் கிடைக்காத நற்பலன் எதுவுமே இல்லை. 

 

பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை சுமனை என்னும் ஐந்து பசுக்களின் வம்சமாகவே இன்று உலகில் உள்ள எல்லா பசுக்களும் உள்ளன என்பது புராண வரலாறு. எனனே பசுக்களில் பேதம் எதுவும் இல்லாமல் எல்லாமே வழிபடத்தக்கவை தான்.

 

ஒருவராகவோ பலர் சேந்தோ இந்த பூனையை செய்யலாம். கோயிலில் அல்லது வீட்டில் நடத்தலாம்.

 

பொதுவானதோர் புனித இடத்தில் பலர் கூடி செய்யலாம். எப்படி செய்தாலும் பலன் நிச்சயம். கன்றுடன் கூடிய பசுவனாட8ால் பலன் கூடுதலாக கிடைக்கும். வெள்ளிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி நாட்களில் பசுவுக்கு பூஜைசெய்யலாம். தொடர்ந்து ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொரு வாரம் அல்லது மாதம் செய்வது நற்பலனை அதிகரித்து குடும்பத்தில் சுபிட்சம் நிலவச் செய்யும்.

சுபமான நேரத்தில் பூஜையை தொடங்க, பசுவை அழைத்து வர வேண்டிய நேரம் போன்றவற்றை முதல் நாளே திட்டமிட்டு கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் பசுவை பூஜை நடத்தும் இடத்துக்கு அழைத்து வர செய்யுங்கள்.

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE