பல்லிகளைத் தொட்டால் பாவம் நீங்குமா?

By நந்தா

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் அதிசய ரகசியம்!

இந்தியாவின் ஏழு முக்தி தலங்களில் ஒன்றாக போற்றப்படும்
புண்ணிய பூமி காஞ்சிபுரம்,

அதன் ஆன்மிக அதிசயங்களால் இன்றும் பக்தர்களை ஈர்த்து வருகிறது.
அந்த அதிசயங்களில் ஒன்றுதான் –
வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள இரண்டு பல்லி சிற்பங்கள்.

ஏன் “வரதராஜன்” என்ற பெயர்?

ஒரு காலத்தில்
பிரம்மதேவர், சரஸ்வதி தேவியின்றி யாகம் ஒன்றை நடத்தினார்.
அதைத் தடுக்க விரும்பிய சரஸ்வதி தேவி,
வேகவதி நதியாக பெருக்கெடுத்து ஓடி யாகத்தை அழிக்க முயன்றாள்.
அப்போது,
திருமால் வராக ரூபமாக நதியைத் தடுத்து,
பிரம்மதேவரின் யாகத்தை காப்பாற்றி அருள்புரிந்தார்.

யாகம் நிறைவு பெற்ற பின்,
திருமால் கேட்ட வரங்களை எல்லாம் அருளியதால்,
“வரம் தரும் அரசன்” – வரதராஜன்
என்று பெருமாள் அழைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்
புண்ணியக்கோடி விமானத்தின் கீழ்
மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார் வரதராஜப் பெருமாள்
பெருந்தேவி தாயார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்
இந்த ஆலயத்தின் உத்தரத்தில் தான்
அந்த அதிசய பல்லி சிற்பங்கள் அமைந்துள்ளன.

தங்கம் & வெள்ளி பல்லிகள் – அதற்கான புராணம்
ஸ்ருங்கிபேரர் என்ற முனிவரின் மகன்கள்
ஹேமன், சுக்லன்
என்பவர்கள், கௌதம முனிவரின் ஆசிரமத்தில் சீடர்களாக இருந்தனர்.

ஒரு நாள்,
பூஜைக்காக வைத்த தீர்த்தத்தை மூட மறந்ததால்,
அதில் விழுந்திருந்த பல்லி
அபிஷேக நேரத்தில் குதித்து ஓடியது.
இதனால் கோபமுற்ற கௌதம முனிவர்,
அந்த இருவரையும்
பல்லிகளாக மாறுமாறு சபித்தார்.
சாப விமோசனம் எப்படி?
தங்கள் தவறை உணர்ந்த சீடர்கள்,
சாப விமோசனம் வேண்ட,
முனிவர் கூறினார்:

“மகாவிஷ்ணுவை தரிசித்தால்
உங்கள் பாவமும் சாபமும் நீங்கும்.”
அதன்படி,
இருவரும் காஞ்சிபுரம் வந்து
வரதராஜப் பெருமாள் கோயிலின் உத்தரத்தில்
பல்லிகளாக இருந்து தவமிருந்தனர்.
அவர்களின் பக்தியை மெச்சிய பெருமாள்,
சாப விமோசனம் அளித்தார்.

அதன் நினைவாகவே
ஒரு பல்லிக்கு தங்கக் கவசமும்
மற்றொன்றுக்கு வெள்ளிக் கவசமும்
அணிவித்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பல்லிகளைத் தொட்டால் என்ன பலன்?
இந்த இரண்டு பல்லிகளை
தொட்டு அல்லது தரிசித்து வணங்கினால்
அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும்
சகல தோஷங்களுக்கு நிவர்த்தி கிடைக்கும்
மனச்சுமை குறைந்து அமைதி பெருகும்
என்பது நீண்ட காலமாக நிலவி வரும் ஐதீகம்.

வழிபாட்டு முறை & தகவல்

24 படிகள் ஏறி
முதலில் பல்லிகளைத் தரிசித்து
பின் வரதராஜப் பெருமாளை வணங்குவது சிறப்பு
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து
சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE