குட்டச்சி சிறுகதை

By சரவணன்

குட்டச்சின்னுதான் எல்லாரும் அந்தம்மாவக்கூப்புடுவாக தெருவுல 
அவுகவீட்டுல வைச்சபேரு நாகம்மா. ஆனா அந்தபேரைச்சொல்லி ஆரும் அந்தம்மாவக்கூப்புட்டதில்ல. ஊருக்குள்ள  மாசமா இருக்குற யாருக்காவதுபிரசவவலி வந்திருச்சின்னாகுட்டச்சியக் கூப்புடும்பாக
உடனே எந்தகேள்வியும் கேக்காமஆசராயிடுவா நாகம்மா

நாடிபுடிச்சஒடனே சொல்லிடுவாஇன்னிக்கி சாயந்தரத்துக்குள்ள
புள்ள பொறந்துடும் ஆம்பளையாபொம்பளையான்னு கூடச்சொல்லிடுவா. பிரசவ வலி வந்தவன்ன நாடி புடிச்சிப்பாத்துட்டு புதுசா ஒரு பிளேடு தொப்புள் கொடி அறுக்க அப்புறம் சுடுதண்ணி  பழைய வேட்டித்துணிக வெள்ளாவிக்குப்போட்டுவாங்குனது இதெல்லாம் கேட்டு வாங்கிடுவா. 

சேலையில காமாச்சி அம்மனை வேண்டிக்கிட்டு ஒத்தரூவா முடிஞ்சிக்குவா. அது சாமி காணிக்கை 
அதுக்கபுறம் கொழந்தை பொறந்தவன்ன தூக்கியாந்து காமிப்பா அப்ப சந்தோசப்பட்டு என்ன குடுத்தாலும் வாங்கிக்குவா
இம்புட்டு அம்புட்டுன்னு கேக்கமாட்டா.

தண்ணிகொடம் ஒடைஞ்சு கூப்புட்டா பாக்கமாட்டா பெரியாஸ்பத்திரிக்குத்தான் தூக்கிட்டு ஓடனும். திட்டுவா இவ்வளவு நேரம் பேன் பாத்துக்கிட்டு இருந்தீங்களான்னு  . அதுக்குப்பயந்துக்கிட்டு முன்னாடியே சொல்லிடுவாக. நாடில வில்லங்கம் இருந்தாநேர பெரியாஸ்பத்திரிக்கி தூக்கிட்டு ஓடுங்கடி என்னால காப்பாத்தமுடியாதுன்னு திட்டவட்டமா சொல்லிடுவா அப்படிச்சொன்னாநிச்சயமா ஆப்பரேசன் கேசாத்தானிருக்கும்
தொழிலு அம்புட்டுச்சுத்தம்.

கொழந்தைய மொதக்குழுப்பாட்ட அவதான் வரணும் . கொழந்தைய கால்ல படுக்கப்போட்டு நல்ல எண்ணயபூண்டுபோட்டுக்காய்ச்சி மேலுக்கு தேச்சி கண்ணுல குளுர விட்டு  வெந்நீர்ல பொறந்தபுள்ளையக்குழிப்பாட்டுவா. ஆம்பளைப்பிள்ளைகன்னா அதோட குஞ்ச பச்சத்தண்ணில கழுவிஎடுப்பா. வெந்நீர் அதுல ரொம்பப்படக்கூடாதாம். கொழந்தை கதறக்கதற குளுப்பாட்டுவா ஆத்தாமாருகளுக்கு கண்ணுல தண்ணி வந்துரும் அதை பாத்து

அதேமாதிரி யாரவது வயசாளிக இழுத்துக்கிட்டுக்கெடந்தா நாடியப்பாத்துசொல்லிப்புடுவா அம்மாசி தாண்டாதுன்னு
இல்ல சொந்தக்காரவுகளுக்குச்சொல்லியனுப்புங்க
ராத்திரி தாண்டாதுன்னு சொல்லிடுவாஅதுதான் நடக்கும் .

அவளுக்கு இன்னோரு பழக்கமும் இருந்துச்சு. அது கோழிபுடிக்கிறது. ஆருவீட்டுக்கோழின்னாலும் கவலைப்படமாட்டா. வெங்காயத்துல நாட்டுவேலிக்காத்தான் முள்ள குத்திப்போட்டு அதை கோழி முன்னாடி போடுவா. கோழிகொத்துனவன்ன கத்தமுடியாது. அதை ஈரச்சாக்கைப்போட்டு அமுக்கிதூக்கிட்டுப்போய்டுவா. எறகெல்லாம் குழிதோண்டிப்பொதைச்சிடுவா. கோழி கொழம்பாயிடும். ஆரு கேட்டாலு சத்தியம் பண்ணுவா அது நா வளத்த கோழில்லான்னு

நாளபின்ன தேவைப்படுவாளேன்னு ரொம்ப அவகிட்ட கோவிச்சிக்க மாட்டா. 
குட்டச்சி நாட்டுவைத்தியமும் பாப்பா. கால்ல முள்ளுகுத்தி சலம்வைச்சிப்போனது தீராத வயத்தவலி எல்லாம் சரிபண்ணுவா. 

ராத்திரில தேள் கொட்டிடுச்சுன்னா குட்டச்சிக்கு சொல்லி அனுப்புவாக தேள்கடி பூரான்கடின்னு கடிவாயப்பாத்துச்சொல்லி மருந்து குடுப்பா....

பொறப்பு மொத சாவுவரைக்கும் அந்த ஊருல குட்டச்சி இல்லாம நடக்காது. எல்லாத்துலயும் முன்னாடி நிப்பா. ஆனா சாப்பாட்டுக்கு அப்ப அப்ப கையேந்துர நெலமைதான் அவளுக்கு. விசேச நாளுகள்ல அவளுக்கு சேலையெடுத்துக்குடுப்பாக  மத்த நாளுகள்ல வயல்ல கூலிவேலைக்கிப்போவா.
அந்த ஊரு செல்லாயிய பக்கத்து ஊர்லதான் கட்டிக்குடுத்துருக்கு 
அவளபிரசவத்துக்குநேரடியாபெரியாஸ்பத்திரிக்கிக்கூட்டிட்டுபோய்ட்டாகஅங்க சிக்கலாகி தாய்புள்ள ரெண்டுபேத்தையும்

காப்பாத்த முடியலன்னு சேதிவந்துச்சுஎல்லாரும் அலறியடிச்சிகிட்டு 
ஆசுபத்திரிக்கி ஓடுனாக அங்க போனாபாடி மாரச்சுவரில கெடக்குன்னுட்டாக\ குட்டச்சியும் போயிருந்தா அவுககூட
ஒருவழியாக்காசக்குடுத்து தாய்பிள்ளை ரெண்டையும் வெளிய கொண்டாந்தாக
எல்லாரும் கட்டிப்புடிச்சி அழுதாக இப்புடிபோயிட்டியே மகராசின்னு

அப்பப்பாத்தான் செல்லாயி கண்ணுக்குக்கீழே அசஞ்சமாதிரி பட்டது குட்டச்சிக்கு,,,,
ஏய் எல்லாரும் வெலகுங்கடின்னு எல்லாரையும் தள்ளிவிட்டுட்டு பக்கத்துல போய் பாத்தா குட்டச்சிக்கு சந்தேகம் வந்துருக்குஒடனே நாடியப்புடிச்சிப்பாத்தாசந்தேகம் உறுதியாயிடுச்சு 
ஏய் ஓடிப்போய் கொஞ்சம்மொளகாப்பொடியஎடுத்துட்டு வாங்கடின்னு பரபரத்தா கத்துனா ஆரோ ஓடிபோயி கொண்டாந்தாக

எல்லாரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்கடின்னுசொல்லிட்டு சேலையால மூஞ்சை மூடிக்கிட்டுமொளகாப்பொடிய செல்லாயி மொகத்தூலதூவுனா மூக்கு லேசா ஆடிச்சி கண்ணுல இருந்து தாரதாரயா கண்ணீர் வர ஆரம்பிச்சது .திடீருண்ணு செல்லாயி தும்முனா பாருஎல்லாரு அரண்டுபோயிட்டாகதும்மல்ன்னா அப்புடியொரு தும்மலுஉடம்பு அசைய ஆரம்பிச்சது

நாகம்மா சொன்னா. செல்லாயி பொழைச்சிக்கிட்டா தண்ணிய கொண்டாங்கடின்னா எல்லாருக்கும் அவுக கண்ண அவுகளாலயே நம்பமுடியல. எல்லாருக்கும் சந்தோசமாயிடுச்சு. செல்லாயி ஆயிசு கெட்டி எமனையே எட்டி ஒதச்சவன்னு பேசிக்கிட்டாக. எட்டி ஒதச்சது குட்டச்சியாக்கும்.
அங்குனக்குள்ள ஒருத்திசொன்னா உசுறோட இருக்குறவள செத்துப்போனதா சொன்ன அந்த டாக்குட்டரை கிழி கிழின்னு கிழிக்கனும்னா.

அதுக்கு குட்டச்சி சொன்னா உசுறு போறதும் வாரதும் மனுசன் கையில இல்ல.நம்மளுக்கு செல்லாயி திரும்ப வந்துட்டா

ஒருமாசம் போனவன்ன தீட்டுகழிச்சிட்டு காமாச்சி கோவில்லஅடசபொங்க வைச்சிடுங்கன்னு.. அதுக்கு ஒருத்தி சொன்னா அதுக்கு வாங்கிட்டு வார கோழிய வெங்காயத்தைப்போட்டு அமுக்கிடுவா குட்டச்சின்னா. அவளை குட்டச்சி மொறச்சா. 

நடந்துதுஎன்னான்னுதெரியாமசெல்லாயிஎவடிஇங்கமொளகாப்பொடிய தூவுனவன்னு கேட்டாஅதுக்கு ஒருத்திசொன்னா குட்டச்சி காதுல விழுந்துச்சு வகுந்துபுடுவான்னுசொல்ல எல்லாரும் சிரிச்சாக.
அதுல இருந்து குட்டச்சிக்கு ஊருக்குள்ள கொள்ள மரியாதை......

அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE