கிளியோபாட்ரா பூங்கொத்தை தாங்கி...

By செய்திப்பிரிவு

கிளியோபாட்ரா பூங்கொத்தை தாங்கி..

கொஞ்சம்
நின்று செல்லடி எழிலழகியே...!
அழகு
காத்துக்கிடக்கிறது
உன்னை காண்பித்து
தன்னை
அடையாளப்படுத்த...!
ஒரு வார்த்தை
பேசித்தான் செல்லேன்
சங்கீதம்
தன்னை
சிக்கெடுத்துக் கொள்ளட்டும்...!
பார்த்துநட
வனப்பு
வழிந்துவிடப்போகிறது
வாங்கிக்கொள்ள
நந்தவனம்
பூக்களேந்தி ஏங்கி நிற்கிறது...!
கிளியோபாட்ரா
பூங்கொத்தை தாங்கி நிற்கிறாளாம்
உன்னை தரிசித்து
ஆத்மா
நிறைந்து போக...!
என்ன
கொடுமையடி
என்னிடம் அடங்காத
என்
சில கவிதைகளும்
உன்னிடம்
மயங்கி நிற்கின்றன...!
வென்று விடுவேனென்று
எதிர்காலம்
இனி
தம்பட்டயடிக்கவே முடியாது
அழகின் விடயத்தில்...!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE