சசிகலா தென் மாவட்டத்தில் ஆன்மீக பயணம் - அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

By Senthil

சசிகலா திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார். 

இதனையொட்டி, இன்று சென்னை விமானத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றார். அவருக்கு தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியில் சசிகலாவுக்கு திரளான தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவருக்கு சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் கூடி உற்சாக வரவேற்பு வழங்கினர். இதில், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும், அவர்  2 நாள் தெற்கு சுற்று பயணத்தை முடித்துவிட்டு கடையநல்லூர், சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மதுரை சென்று அங்கிருந்து மீண்டும் விமானம் மூலம் சென்னை வந்து அடைகிறார். 

.
மேலும்