சேலத்தில் மே 23 முதல் மீண்டும் விமான சேவை!

By News Room

சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் காலை வேளையில் சென்னையில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மே 24- ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் வரத்தும் குறைந்தது.

பயணிகள் விமானத்தை இயக்கினால் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, விமானிகளுக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், மே 13- ஆம் தேதி முதல் வரும் மே 22- ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு சேலம்- சென்னை இடையே பயணிகள் விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ட்ரூஜெட் நிறுவனம் இன்று (21/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மே 23- ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை மீண்டும் தொடங்குகிறது. சென்னையில் இருந்து காலை 07.15 மணிக்கு சேலத்திற்கும், சேலத்தில் இருந்து காலை 08.35 மணிக்கு சென்னைக்கும் ட்ரூஜெட் விமானம் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.
மேலும்