சிலிண்டர் விலை உயர்வு போராட்டம் நடத்துவாரா அண்ணாமலை - வைகோ கேள்வி

By Senthil

எதெற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சமையல் எரிவாயு விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வரும் மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் செய்வாரா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலைக்கு கேள்வி சமையல் எரிவாயு மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறோம் என்ற திட்டத்தைச் செயல்படுத்திய மத்திய அரசு, மானியத்தை ரூ. 300ல் இருந்து தற்போது வெறும் ரூ.24க குறைத்துள்ளது. தாங்க முடியாத விலைவாசி உயர்வால் மக்கள் அல்லல்படும் நிலையில், சமையல் எரிவாயு விலையையும் தொடர்ந்து உயர்த்துவதை பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் எதெற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வரும் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

.
மேலும்