யானை பற்றிய பழமொழிகள்!

By நந்தா

1. யானை_அசைந்து_தின்னும்; வீடு அசையாமல் தின்னும்.
2. யானை ஆசார வாசலைக் காக்கும்; பூனை புழுத்த மீனைக் காக்கும்.
3. யானை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா?
4. யானை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.
5. யானை உண்ட விளாங்கனியைப் போல.
6. யானை ,ஒரு திட்டி வாசலில் நுழைவதைப் போல.
7. யானை ஒரு குட்டி போடுவதும், பன்னி பல குட்டி போடுவதும்.ஒன்றாகுமா?
8. யானை தன்னைக் கட்ட சங்கிலியை தானே எடுத்துக் கொடுத்தாற் போல.
9. யானை கண்ட குருடர் அடித்துக் கொண்டதைப் போல.
10. யானை காணாமற் போனால் குண்டுச் சட்டியில் தேடினால் அகப்படுமா?
11. யானை குட்டி போடும் என்று பார்த்தால் லத்தியல்லவா போடுகிறது?
12. யானை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்பதா?
13. யானைக்கில்லை கானலும், மழையும்.
14. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
15. யானைக்கு சிட்டுக்குருவி மத்தியஸ்தம் செய்தாற்போல்
16. யானைக்கு தீனியிடும் வீட்டில் ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா?
17. யானைக்கும் அடி சறுக்கும்.
18. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
19. யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போல.
20. யானை யைப் பார்க்க வெள்ளெழுத்தா?
21.யானை போன வழியிலே ஆட்டுக்குட்டியா போக முடியாது?
22. யானை மேல் இருக்கிற பாரத்தை பூனை மேல் இடலாமா?
23.யானை மேல் இருக்கிற அரசன் சோற்றை விட, பிச்சை எடுக்கும் பாப்பான் சோறு மேல்.
24. யானையும், யானையும் மோதும் போது இடையில் அகப்பட்ட கொசுபோல.
25. யானையைத் தேட, குடத்துக்குள் கைவிட்டதைப் போல.
26. யானையை விற்று பூனைக்கு வைத்தியம் பார்ப்பதைப் போல.
27. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.
28. யானை வாய்க் கரும்பு போல.
29. யானையின் வேகம் அடங்கும் அங்குசத்தில்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE