தாயின் பாசம் மட்டும் தான்...

By சரவணன்

உடைந்து போகும்
தன் பிள்ளைகளின் நம்பிக்கைக்கு
ஊன்று கோலாக அமையும்
அம்மாவின் அரவணைப்பு, பேரானந்தமே!


தனக்காக வாழாமல்
எந்நாளும் தன் கணவருக்காக,
தான் பெற்ற குழந்தைகளுக்கா
வாழும் ஓர் உன்னத ஓவியம் "பெண்"

உலகில் தேடி தேடி அலைந்தாலும்
மீண்டும் அமர முடியாத
சிம்மாசனம் தாயின் கருவறை

இன்பம் துன்பம் எது வந்த போதிலும்
தன் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது

தாய்மைதாயின் கருவறையில் இருந்து
பிறக்கும் போதே கட்பிக்க பட்டு விடுகிறது “அம்மா”
என்னும் மூன்று எழுத்து.

ஆயிரம் பேர் உன்னை குறை கூறினாலும்,
"உனக்கு என்னடா குறை” என சொல்லும்
அன்னையின் அன்பிற்கு நிகரான சக்தி ஏதுமில்லை!

ஆயிரம் விடுமுறை வந்தாலும்
அவள் அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை அம்மா சமயலறை

பூமி தாங்கும் முன்னே,
நம்மை பூவாய் தாங்கியவள் நம் அன்னை.

அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள்.
தொலைந்து போன பின் தேடாதே.
அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.
அன்னையின் அன்பு...!

கடைசி வரை நம்பிக்கை இழக்காதே,
ஏனெனில் கடைசி வரியில் கூட
உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!

பயத்தையும் தயக்கத்தையும்
தூக்கிப்போடுங்கள் வெற்றி
உங்கள் காலடியில் !

இந்த உலகில்
அளவிட முடியாத ஒன்று உள்ளது என்றால்
அது தாயின் பாசம் மட்டும் தான்.

வலி நிறைந்தது என்பதற்காக
யாரும் விட்டுவிடுவதில்லை தாய்மை!


நான் முதல்முறை பார்த்த அழகிய
பெண்ணின் முகம் அம்மா

ஒவ்வொரு நாளும் கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள்

மனதில் ஒன்று வைத்து உதட்டில்
ஒன்று பேசும் துரோகம் தெரியாத உறவு
உலகில் அம்மா மட்டுமே.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE