யாருக்கு லாபம் குரு பெயர்ச்சி பொதுப்பலன்கள் 2024

By News Room

 நிகழும் மங்களகரமான குரோதி வருடம்,  சித்திரை மாதம் 18ம் தேதி அன்று ,(1.5.2024  மதியம் 1.00 pm) குருபகவான், மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

 அது சார்ந்து 12 ராசிக்கான, பொது கோட்சார பலன்களை பார்ப்போம்.

 இந்த குரு பெயர்ச்சியினால்  மேசம் ,கடகம் ,கன்னி, விருச்சிகம், மகர ராசிக்காரர்கள், மிக நல்ல யோக பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள்.

 இதில் மற்ற கோச்சார (சனி,ராகு கேது) அமைப்புகளின்படி, மிக நல்ல யோக பலன்களை அனுபவிக்க கூடிய  இரண்டே ராசிகள்  மேஷம் மற்றும் கன்னி.

 இந்த இரு ராசிக்காரர்களுக்கும் 100% பொற்காலமாக இருக்கப்போகிறது.

 இவர்கள் எண்ணிய செயல் அனைத்தும் ஈடேறும். பணம் தாராளமாக புழங்கும். இதுவரை திருமணம் தடைபட்டவர்களுக்கு, திருமணம் விரைவில் நடக்கக்கூடிய அமைப்புகள் உருவாகும்.  திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள், ஜாதகத்தில் சுய ஜாதக அமைப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில், குழந்தை பாக்கியத்தையும் எதிர்பார்க்கலாம். 

 அதி அற்புதமான, பொற்காலமாக அமையக்கூடிய காலகட்டம் என்பதால், மேஷ, ராசிக்கும் , கன்னி ராசிக்கும் என் முதல் கண் வாழ்த்துக்கள்.

 கடகம், விருச்சிகம், மகரம்  இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் , குரு பெயர்ச்சி நன்றாக இருந்தாலும், சனியின் ஆதிக்கத்தில் உள்ளோம் என்பதை மறக்க வேண்டாம்.

 குறிப்பாக கடக ராசிக்கு அஷ்டமனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும், மகர ராசிக்கு 71/2யில் பாத சனியும் சென்று கொண்டிருப்பதால், இதற்கு முன் இருந்த நிலைமை கண்டிப்பாக மேம்படும்.  தன்னம்பிக்கை பிறக்கும்.  இதுவரை பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல், தடுமாறி திணறியவர்களுக்கு, பணம் ஏதோ ஒரு வகையில் வந்து உதவும். தன்னம்பிக்கை மேம்படும்.

 குறிப்பாக கடக ராசிக்கு அஷ்டம சனியின் தாக்கம் குறையும்.

 சிம்ம, கும்ப,மீன ராசிகளுக்கு இந்த குரு பெயர்ச்சி , பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அதே நேரத்தில்.  சிம்ம ராசிக்கு பத்தாம் பாவகத்தில் குரு வருவதால்  தொழில் ,வேலையில் எச்சரிக்கை தேவை. பத்தில் குரு பதவியை பறிக்கும் என்ற அமைப்பில்,வேலையில் சகிப்பு தன்மையோடும், புதிய முதலீடுகளை அளவோடும் செய்து கொள்வது நல்லது.

 கும்ப ராசிக்கு ஜென்ம சனி நடப்பதாலும் ,குரு 3ஆம் பாவகத்திலிருந்து ,4ம் பாவகத்தில் மாறி, தொழிற் ஸ்தானத்தை பார்ப்பதால் ,ஓரளவு தொழிலில் முன்னேற்றங்கள், கடந்த கால நிலையை ஒப்பிடும்போது உயர்வாக அமையும்.

 மீன ராசிக்கு ,ஏழரை சனி ஆரம்பித்து சென்று கொண்டிருப்பதாலும், தனஸ்தானத்திலிருந்து விலகி, 3ம் இடமான பகை வீட்டில் ராசியாதிபதி குரு அமர்வதாலும், பண விஷயங்களில் கறார் காட்டுவது நல்லது. விரய சனி காலகட்டங்கள் என்பதால், பண விஷயங்களில்  மிக மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  சேமிப்பு கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும்.

ரிஷபம், மிதுன, துலா, தனுசு ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கக்கூடிய காலம் என்றால், அதில் மாற்று கருத்தே இல்லை.

 குரு பணத்திற்கு காரக கிரகம் என்பதால்  குரு 

6,8,12 ல் மறையும், தனுசு, துலாம்  மிதுன லக்னக்காரர்கள்  பணத்தை சிக்கனமாக கையாள்வது நல்லது.

 ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதையும் , ஆடம்பர செலவு செய்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

 கொடுக்கல் வாங்கலில் மிக மிக எச்சரிக்கை தேவை.

 குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதிலும்  கவனம் தேவை.

 குழந்தைகளால் சில விரயச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

 இது பொதுக் கோச்சார பலன் மட்டுமே. உங்களுடைய சுய ஜாதக  அமைப்பு மட்டும்தான் ,எப்பொழுதுமே ஒரு பலனை உயர்த்தியோ, தாழ்த்தியோ பிடித்துப் பேசும் என்பதால், சுய ஜாதக அமைப்புகளை குரு பெயர்ச்சியின் போது, ஆராய்ந்து கொள்வது நல்லது.

 இந்த குரு பெயர்ச்சியால் அனைவரும் திருச்செந்தூர் முருகனை தினசரி வழிபட, குருவினால் பாதிக்கப்படுபவர்கள் ஓரளவு நன்மையான பலனையும், நல்ல யோகத்தை பெரும் ராசிகள் மிகச் சிறப்பான பலனையும் மேலும் பெறலாம்.

ஓம் நமசிவாய

நன்றி ஜோதிடர் மாரிமுத்து.,9788968519.

.
மேலும்