இன்றைய ராசி பலன்கள் - 31-07-2025 (வியாழக் கிழமை)

By சரவணன்

மேஷம்

பிரியமானவர்களிடம் அனுசரித்து போகவும். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
முடியாத வேலைகளை செய்ய வேண்டாம். காரிய தடை விலகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.

ரிஷபம்

குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வரவு, செலவு கணக்கில் கவனமாக இருக்கவும்.முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிற்க்கவும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

மிதுனம்

மனக் கவலை அகலும். சாதுர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும்  மனக்குழப்பம் அதிகமாக காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.

கடகம்

தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். பண தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

சிம்மம்

குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட முடியும்.காரிய தடைகள் விலகும் நினைத்த காரியம் கைகூடும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கன்னி

மனநிறைவும் சந்தோஷமும் உண்டாகும்.சோம்பல் விலகும். சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வீண் சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும். பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் கைகூடும்.உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும் .
மருத்துவ செலவுகள் வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

விருச்சிகம்

புதிய முயற்சிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.உடல் நலனில் அக்கறை கொள்ளவும். நல்லதையும் கெட்டதையும் சமமாக பாவித்துக்கொள்ளவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.

தனுசு

 கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். அடிக்கடி மறதி தொல்லை வரும்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள். நல்ல தகவல் வந்து காதில் விழும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

மகரம்

குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.பிரியமானவர்களின் நேசத்தைப் பெற முடியும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்பம்

குடும்பத்தில் குழப்பான சூழல் காணப்படும். யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள்.உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். உத்யோகத்தில் நற் பெயர் கிடைக்கும்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.இரவு வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது.

மீனம்

பொது காரியங்களில் ஈடுபாடு வரும்.அரசியல் செல்வாக்கு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். பண தேவைகள் பூர்த்தியாகும் .வாகன பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE