மனித உடலும் குதிரை முகமும் கொண்டவர்?

By செய்திப்பிரிவு

இவர் பெயர் தும்புரு. இவர் காசியப முனிவருக்கு மூத்த மகனாக மனித உடலும் குதிரை முகமுமாக அவதரித்தவர். நாரதர் இவருடைய குரு. நாரதரைப் போலவே இசையில் வல்லவர்.

நாரதரின் இசைக்கு நாரதகானம் என்றும், தும்புருவின் இசைக்கு தேவகானம் என்றும் பெயர். இவர் கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள் ஆகியோரின் தலைவர். இவர்களில் சிலர் பறவை உடலும் மனித முகமும் கொண்டவர்கள்.

ஒருமுறை நாரதர், தும்புருவின் கையில் வைத்து இருந்த பொன்னும், மணியும் பதித்த வீணையைக் கண்டு விவரம் கேட்க, பூலோகத்தில் #ப்ராசீனபர்ஹி என்ற பேரரசனைப் புகழ்ந்து பாடியதால் கிடைத்தது என்கிறார். நாரதர், கோபத்துடன் இறைவனைத் தவிர #நரஸ்துதி கூடாது எனத் தெரியாதாவென்று கேட்டார். தும்புரு பூலோகத்தில் போய் வீழவேண்டுமென்று சாபமும் இட்டார்.

திருப்பதி திருமலையில் உள்ள கோண_தீர்த்தம் என்னும் பகுதியில் தும்புரு வீழ்ந்தார். இதுவும் இறைவனின் திருவுளமே என்று நாராயணனைத் துதித்து #பரமபதம் அடைந்தார். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அனைவரும் பரமபதம் அடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்க அதுவும் நிறை வேற்றப்பட்டது.

அன்று முதல் கோண தீர்த்தம் #தும்புரு_தீர்த்தம் ஆனது. தும்புருவின் கையில் உள்ள வீணையின் பெயர் களாவதி (மகதி)..!!

அமைவிடம்: சக்கரபாணி கோவில், கும்பகோணம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE