சுவையான அரிசி அல்வா செய்வது எப்படி?

By Senthil

கோடை விடுமுறை வருபோகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களுக்கு மாலை நேரங்களில் திண்படங்கள் ஏதேனும் செய்து கொடுக்கலாம் என நினைக்கும் தாய்மார்களுக்கு இதோ அரிசி அல்வா எப்படி செய்யலாம் என பார்ப்போம்...

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - கால் கிலோ
வெல்லம் - கால் கிலோ
தேங்காய் - 2 கப் 
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரி பருப்பு - 10
உலர் திராட்சை - சிறிதளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெல்லத்தை தூளாக்கி கொள்ளவும். பின் தேங்காயை துருவிக்கொள்ளவும். அரிசியை நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

தேங்காய் துருவலில் நீர் விட்டு அரைத்து, பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.அடுப்பில் வாணலியை வைத்து, சிறிதளவு நீர் ஊற்றி வெல்லத்தை கொட்டி அது பாகுவாக மாறியதும் வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

வெல்ல பாகுவுடன் அரிசிமாவு, தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும். 

அவை கொதித்து வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு கிளற வேண்டும். அதனுடன் முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய் தூள் போட்டு கிளற வேண்டும். 

அரிசி மாவு வெந்ததும் தொடர்ந்து கிளறினால் நிறம் மாறி அல்வா பதத்துக்கு ஒட்டாமல் வரும்.

சிறிது நேரம் வேக வைத்து அல்வா ஓரளவு கெட்டியானதும் கீழே இறக்கி அகன்ற பாத்திரத்தில் கொட்டி ருசிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

.
மேலும்