ஆவாரம் பூ டீ செய்வது எப்படி?

By செய்திப்பிரிவு

முதலில் ஒன்றரை லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது இந்த பாத்திரத்தை வைத்து, தண்ணீரை சூடு படுத்த வேண்டும். தண்ணீர் நன்றாக சூடானதும் அதில் ஒரு கைப்பிடி காய்ந்த ஆவாரம்பூவை சேர்க்க வேண்டும்.

இவை இரண்டும் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விடவேண்டும். இதில் சேர்த்துள்ள ஒன்றரை லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் தண்ணீர் ஆகும்வரை நன்றாக கொதிக்கவிட வேண்டும். பிறகு இவற்றை ஒரு வடிகட்டி வைத்துக் வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை சிறிது நேரத்திற்கு ஆறவிட வேண்டும்.

பிறகு இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து அனைவருக்கும் பருகலாம். இவற்றை குடிப்பதன் மூலம் நமது ஆரோக்கியமும் பலப்படும், அழகும் அதிகரிக்கும். எந்த வித சரும பிரச்சனைகள் இருந்தாலும் அவை படிப்படியாக குணமாகும்.

வயிற்றுப்புண் குணமாகும், சிறுநீர் பிரச்சனைகள் சரியாகும், காய்ச்சல் குணமாகும், உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும், பித்தம், நீர்க்கடுப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் அனைத்தையும் இந்த ஆவாரம் பூ டீ ஒன்று மட்டுமே சரிசெய்துவிடும்....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE