26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை?

By நந்தா

சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍ விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே  மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ இருக்கிறோம். இம்மூலிகை காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்:

*1. கண் பார்வைக் கோளாறுகள்
 *2. காது கேளாமை
*3. சுவையின்மை
*4. பித்த நோய்கள்
*5. வாய்ப்புண்
*6. நாக்குப்புண்
*7. மூக்குப்புண்
*8. தொண்டைப்புண்
*9. இரைப்பைப்புண்
*10. குடற்புண்
*11. ஆசனப்புண்
*12. அக்கி, தேமல், படை
*13. பிற தோல் நோய்கள்
*14. உடல் உஷ்ணம்
*15. வெள்ளைப்படுதல்
 *16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
*17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு
*18. சதையடைப்பு, நீரடைப்பு
*19. பாத எரிச்சல், மூல எரிச்சல்
*20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி
*21. ரத்தபேதி
 *22. சர்க்கரை நோய், இதய நோய்
*23. மூட்டு வலி, உடல் பலவீனம்
*24. உடல் பருமன்
*25. ரத்தக் கோளாறுகள்
*26. ஆண்களின் உயிரணுக்களின் குறைபாடுகள்

மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த‍ மருத்துவத்தில் மட்டுமே உண்டு.
நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப் பின் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர, மேற்கண்ட 26நோய்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு, நோயில்லா பெருவாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE