காம உணர்வை சரியாக பயன்படுத்த தெரியாமல் பாலுறவை முழுமையாக அனுபவிக்க தெரியாமல் அனுபவிப்பதால் அதை சிற்றின்பம் என்று ஒதுக்கிவைத்தனர்.
பாலுறவில் பேரின்பம் அடைவதற்கு தடையாக இருப்பது பாலுறவை காதல் அன்பு இல்லாமல் குற்ற உணர்வுடன் அவசரம் அவசரமாக, இருவரின் மனதின் ஒப்புதல் இல்லாமல்
ஒருவரை மட்டும் வலுக்கட்டாயபடுத்தி, மனதிற்கு பிடிக்காமல், கட்டாயப்படுத்தி பொது இடங்களில் இன்னும் பல காரணங்களால் பாலுறவு சிற்றின்பமாக கூட சுவைப்பது இல்லை
பாலுறவு பேரின்பமாக மாற்ற காதலும் காமமும், நிலவும் ஒளியும் போல, பாலும் தேனும் போல ஒன்றோடு ஒன்று கலந்து, கரைந்து அவசரம் இல்லாமல், நிதானமாக, ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக, அரவணைப்பாக, அன்புடனும்.
காமத்தின் ஒவ்வொரு கனத்தையும் அணு அணுவாக ரசித்து கொண்டு உச்ச இன்பம் மட்டும் அல்ல இத்தகைய கலவியில் அணைத்து செயல்பாடுகளும் பேரின்பமாக உங்கள் மனக்காட்சிகளில் தோன்றிக்கொண்டே இருக்கும்.
ஆணுக்குள் புதைந்து இருக்கும் இன்பத்தை பெண் தோண்டி எடுக்கவேண்டும், பெண்ணக்குள் இருக்கும் இன்பத்தை ஆண் தோண்டி எடுக்கவேண்டும் இதுவே கலவியின் ரகசியம்.
சிற்றின்பத்தை பேரின்பமாக மாற்றும் கலை ஆண்/பெண் இருவரின் திறமையில்தான் இருக்கிறது.
காமம் என்னும் சிற்றின்பத்தில் காதலை கலக்கும் போதுதான் அது பேரின்பமாக மாறுகிறது.
வாழ்கை என்னும் சக்கரத்தை உற்சாகத்துடன் ஓட்ட ஒவ்வொரு மனித வாழ்வுக்கும் இந்த பேரின்பம் மிகவும் இன்றியமையாதது.
தன் வாழ்க்கையில் ஆண் பெண் இருவரும் உச்ச இன்பத்தை அனுபவிக்காதவர்கள் அவர்களை வாழ்வில் முழுமையானவர்களாக கருதுவது இல்லை.