மூடு வரும்போது மட்டும் மனைவியை ஒருத்தர் கொஞ்சுனா, உடனே அவரோட மனைவி "அது சரி.. ஒரு வாரம் ஆச்சுல்ல.. உடனே உங்களுக்கு இடுப்புக்கு கீழ வலி வந்துடுமே.." அப்படின்னு சொல்லுவாங்க..
இல்லைன்னா "உங்களுக்கு எப்பவுமே இந்த நினைப்பு தானா.. இதுக்கு மட்டும் தான் நான் தேவை.." அப்படின்னும் சொல்லுவாங்க.
நைட் பத்து மணி வரைக்கும் வீட்டு வேலை செய்துட்டு வந்து படுக்குற மனைவியை நோண்டுனா, ஒன்னு 'மூடிக்கிட்டு படு' அப்படின்னு சொல்லுவாங்க.
இல்லைன்னா 'நசை.. சீக்கிரம் முடிச்சுத் தொலை' அப்படின்னு தான் சொல்லுவாங்க.
மாசத்துக்கு ரெண்டு இல்லைன்னா மூனு தடவை பிக்ஸ் பண்ணிக்கிட்டு பிளான் பண்ணனும்.. மனைவிக்கு அதிக வேலை பளு இல்லாம பார்த்துக்கணும்.
பொதுவா நகை பணம் சொத்து சேக்குற கணவர்களை விட, கட்டில்'ல சொக்க வைக்குற கணவர்களை தான் மனைவிங்க அதிகமா விரும்புவாங்க.
சொல்லித் தெரியுறது இல்லைங்க இதெல்லாம்.. பொழுதனைக்கும் இன்ஸ்டா, Youtube, வாட்ஸ் ஆப்'ல கவர்ச்சியான சமாச்சாரங்களை பாக்குறவங்களுக்கு மனைவி மேல எப்படி ஈர்ப்பு வரும்.. வரவே வராது.
அடிக்கடி மனைவி கிட்ட அன்பா ரிலாக்ஸா பேசணும்.. அவங்க செய்யுற சின்ன சின்ன விஷயங்களை பாராட்டணும்..
குண்டோ, ஒல்லியோ, நெட்டையோ, குட்டையோ, மாநிறமோ, வெள்ளாவியில வைச்சு வெளுத்த நிறமோ, நமக்காக ஓயாம உழைக்குற அந்த பாவப்பட்ட ஜென்மங்களை அடிக்கடி மனசார பாராட்டணும்.
முடிஞ்சா அவங்க அழகை நாகரீகமான முறையில வர்ணிக்கலாம் தப்பில்ல. அதாவது ஒரு புருஷன் தன்னோட மனைவியை வர்ணிக்குறதை பத்தி சொன்னேன். ஊர்'ல இருக்குற அடுத்தவன் பொண்டாட்டியை வர்ணிக்குறதை சொல்லல.
கொஞ்சம் பிரைவசி இருக்கணும். வளர்ந்த பிள்ளைங்களும் வயசான பெத்தவங்களும் வீட்டுல இருந்தா கொஞ்சம் கஷ்டம் தான். மனைவியை வெட்கப்பட வைத்து கட்டிலில் இன்பத்தில் கதற வைப்பவனே உண்மையான கணவன்.
இந்த உலகில் பிறந்த 90%-க்கும் மேலான பெண்கள் வாழ்வில் ஒருமுறை கூட கணவனுடனான உடலுறவில் உச்சம் அடைவதே இல்லை. இரவு நெஞ்சு வரைக்கும் உண்டு விட்டு, இரவு முழுவதும் வாயுவை வெளியேற்றும் கணவனை கண்டால் எந்த மனைவிக்கும் ஆசை வராது.
சிக்ஸ் பேக் இல்லையென்றாலும் உடலை ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கணவனை அவருடைய மனைவி மிகவும் விரும்புவார்.
குறைந்தபட்சம் தொந்தி இல்லாமல் இருப்பது உத்தமம். உறவில் மனைவிக்கு பிடித்த விஷயங்களை திருமணமான நாள் முதல் கணவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ஆண்மகன்கள் பெண்களின் உணர்வுகளையும் வேட்கையையும் நாசமாக்கி விடுகிறார்கள்.
நன்றி: ஆபுத்திரன்.