காலையில் தண்ணீரில் இந்த பொருட்கள் சேர்த்து குடித்தால்? இனி..

By நந்தா

ஆரோக்கிய தண்ணீர் :

காலையில் எழுந்ததும் டீ காபி குடிப்பதை மறந்துவிட்டு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் குறிப்பிட்ட நான்கு பொருட்களை கலந்து குடித்தால் அது உடல் உள் உறுப்புக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அமிலத்தன்மையைக் குறைப்பதில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிப்பது வரை, சிறந்த செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் நச்சு நீக்கம் போன்ற பல நன்மைகள் இதன் மூலம் கிடைக்கும். காலையில் இந்த நீர் குடிக்கும் பழக்கத்தால் பல நன்மைகள் என்பதற்கு பல ஆயுள்வேத சான்றுகள் உள்ளன. இப்போது அந்த ஆரோக்கிய தண்ணீர் வகைகள் பற்றி பார்க்கலாம்.

அமிலத்தன்மையைப்_போக்க சோம்பு தண்ணீர்:

வயிற்றில் அமிலத்தன்மை இருந்தால் அதற்கு காலையில் சோம்பு போட்டு தண்ணீர் குடிப்பது சிறந்தது. இதற்கு டீஸ்பூன் சோம்பை தண்ணீரில் நசுக்கி, பின்னர் 1 கப் தண்ணீரில் 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலையில் சூடாக குடிக்கவும். மிகமுக்கியமாக நாள்பட்ட வயிற்று வலி அல்லது புண்கள் உள்ளவர்கள் இந்த சோம்பு தண்ணீரை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

சிரக தண்ணீர்:

வாயு நிவாரணம் மற்றும் வயிற்று உப்புசத்திற்கு தீர்வு - வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் அரை டீஸ்பூன் ஓமம் மற்றும் அரை டீஸ்பூன் சிரகத்தை 250 மில்லி தண்ணீரில் 5–7 நிமிடங்கள் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி, வயிற்று உப்புசத்தைப் போக்க சூடாகக் குடிக்கவும். இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்தும் வரலாம்.

வளர்சிதை மாற்றம் ஷிலாஜித் தண்ணீர்:

ஷிலாஜித் என்பது இமயமலை போன்ற மலைப்பகுதிகளில் காணப்படும் ஒரு கருப்பு நிற, பிசின் போன்ற தாதுப் பொருள் ஆகும். இது ஆற்றல் அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் மன அழுத்தம் குறைப்பு போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஒரு பட்டாணி அளவு (100–150 மி.கி) சுத்திகரிக்கப்பட்ட ஷிலாஜித் பிசினை வெதுவெதுப்பான நீரில் கரைத்து காலையில் குடிக்கவும்.

நச்சு_ நீக்கத்திற்கான திரிபலா தண்ணீர்:

திரிபலா செரிமானம், மென்மையான நச்சு நீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சமநிலைக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. திரிபலா குடல் இயக்கங்களை மேம்படுத்தவும், குடல் நுண்ணுயிரியல் சமநிலையை ஆதரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், செரிமானம் மற்றும் வெளியேற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் உடலின் இயற்கையான நச்சு நீக்க பாதைகளை மேம்படுத்தவும் உதவும் என்று ஆய்வுகள் மூலம் கூறப்படுகின்றது. 1 கப் வெதுவெதுப்பான நீரில் அரை முதல் 1 டீஸ்பூன் திரிபலா பொடியைச் சேர்த்து, 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் பருகவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE