பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
சாளை மீன் - 8
மாங்காய் துண்டுகள் - 4
தக்காளி -1
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - கோலி அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க -
தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 6
தாளிக்க -
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி -
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
தக்காளியை பொடிதாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்கி வைக்கவும். புளியை 200 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்..
அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும், நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சுருள வதங்கியதும் புளித்தண்ணீர், மாங்காய் துண்டுகள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு மீன்களை சேர்த்து வேகும் வரை கொதிக்க விடவும்.
மீன் நன்கு வெந்ததும் உப்பு சரி பார்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சாளை மீன் குழம்பு ரெடி.