அன்னபூரணி திரைப்பட சர்ச்சை - போலீசார் வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் 1 ம் தேதி ரிலீஸா படம் அன்னபூரணி.  “பிரியாணிக்கு ஏது மதம், அது ஒரு எமோஷன்” என்ரு சொல்லும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா டைரக்ட் பண்ணி இருந்தார்.

 

இந்நிலையில் மும்பையை சேர்ந்த ,சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர், அன்னபூரணி படம் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் லவ்ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் கூறி, மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிச்சிருக்கார்.

 

இந்த புகாரின் அடிப்படையில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் உள்ளிட்டோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செஞ்சிருக்காய்ங்க. மேலும் பட தயாரிப்பாளர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு ஆகி இருக்குது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE